ஆடைத் தொழிற்றுறையின் வருமானம் அதிகரிப்பு

ஆடைத் தொழிற்றுறையின் வருமானம் அதிகரிப்பு

by Staff Writer 12-08-2019 | 6:48 PM
Colombo (News 1st) நாட்டின் ஆடைத் தொழிற்றுறையின் வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 7 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 7 மாத காலப்பகுதியில் இந்தத்துறை மூலமான வருமானம் 9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத் தொழிற்றுறை அமைப்பின் செயலாளர் எம்.பி.ரி. குறே தெரிவித்துள்ளார். இலங்கை ஆடைத் தொழிற்றுறைத் தயாரிப்புக்களில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவதுடன், இரண்டாவது இடத்தில் ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.