கொம்பனித்தெருவில் கொலை: ஐவருக்கும் விளக்கமறியல்

கொம்பனித்தெரு கொலைச் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்

by Staff Writer 12-08-2019 | 5:40 PM
Colombo (News 1st) கொம்பனித்தெரு, முத்தையா வீதியில் அமைந்துள்ள அலங்கார நிலையமொன்றின் முகாமையாளரைத் தாக்கிக் கொலைசெய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு - கொம்பனித்தெரு, முத்தையா வீதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்தின் முகாமையாளர் இன்று (12) காலை கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் பெண்ணொருவருடன் முச்சக்கரவண்டியில் ஸ்டெபள் வீதிக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில், அங்கிருந்த 5 இளைஞர்கள், குறித்த பெண்ணை கேலி செய்துள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் மோதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த நபர் கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொழும்பு - கொம்பனித்தெரு, கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 வயதான இரண்டு இளைஞர்கள் மற்றும் 18, 20, 24 வயதான இளைஞர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.