இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

கொம்பனித்தெருவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 12-08-2019 | 2:47 PM
Colombo (News 1st) கொழும்பு - கொம்பனித்தெரு, முத்தையா வீதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொம்பனித்தெருவிலுள்ள ஸ்டெபல் வீதியிலுள்ள சிகையலங்கார நிலையத்தின் முகாமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 12.30 மணியளவில், பெண்ணொருவருடன் முச்சக்கரவண்டியில் ஸ்டெபல் வீதிக்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில், அங்கிருந்த 5 இளைஞர்கள் குறித்த பெண்ணை கேலி செய்துள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், மோதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த நபர் கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு - கொம்பனித்தெரு, கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 வயதான இரண்டு இளைஞர்கள், 18, 20 24 வயதான இளைஞர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.