பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஹெரோயினுடன் கைது

கருவலகஸ்வெவ பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஹெரோயினுடன் கைது

by Staff Writer 12-08-2019 | 7:12 PM
Colombo (News 1st) கருவலகஸ்வெவ பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் 700 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஆனமடுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திமன்த விமுக்தி ஏக்கநாயக்க எனப்படும் பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (12) மதியம் ஆனைமடு புத்தளம் வீதியின் தோனிகல பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று பிற்பகல் ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.