by Chandrasekaram Chandravadani 11-08-2019 | 2:54 PM
Colombo (News 1st)
UPDATE: 4.00 PM: ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------
3.29 PM: ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு, சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தத் தேசிய மாநாட்டில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.