ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ அறிவிப்பு

by Chandrasekaram Chandravadani 11-08-2019 | 2:54 PM

Colombo (News 1st)

UPDATE: 4.00 PM: ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------

3.29 PM: ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------------------------ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு, சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இந்தத் தேசிய மாநாட்டில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  பெயரிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.