மதுபோதையில் வாகனம் செலுத்திய 165 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 165 சாரதிகள் கைது

by Staff Writer 11-08-2019 | 3:51 PM
Colombo (News 1st) இன்று (11) அதிகாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 967 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.