தேயிலை ஏற்றுமதி தொடர்பில் ஈரானுடன் பேச்சுவார்த்தை

தேயிலை ஏற்றுமதி தொடர்பில் ஈரானுடன் பேச்சுவார்த்தை

by Staff Writer 11-08-2019 | 2:30 PM
Colombo (News 1st) தேயிலை ஏற்றுமதி தொடர்பில் ஈரானுடன் பேச்சவார்த்தை நடைபெற்று வருவதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அநுர சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான பணத்தைக் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்களை நீக்குவது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது.