50 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத்தருவதாக திகாம்பரம் மீண்டும் வாக்குறுதி

by Bella Dalima 10-08-2019 | 7:56 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத்தருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று மீண்டும் வாக்குறுதியளித்தார். பூண்டுலோயா - சீன் கீழ் பிரிவு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அமைச்சர் பழனி திகாம்பரம் இந்நிகழ்வில் தெரிவித்ததாவது,
நான் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக 50 ரூபா சம்பளம் கட்டாயம் வாங்கிக் கொடுப்பேன். யாருக்கும் நீங்கள் பயப்படாதீர்கள். திகாம்பரம் ஒரு நாளும் மலையக மக்களை ஏமாற்றமாட்டார். திகாம்பரம் சொன்னதை செய்து கொண்டிருக்கின்றார். கட்டாயமாக 50 ரூபா வாங்கிக் கொடுப்பேன். போன ஜனாதிபதி தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்தீர்கள், அதே மாதிரி இந்த தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நாங்கள் சரியான முடிவை உங்களுக்கு அறிவிப்போம்.