சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் அனுப்பி வைப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் உரிய தரப்பினருக்கு அனுப்பி வைப்பு

by Bella Dalima 10-08-2019 | 4:01 PM
Colombo (News 1st)  ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட ஜனாதிபதி குழுவின் பரிந்துரை அறிக்கை தொடர்பான சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பான சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் உரிய தரப்பினருக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.