by Staff Writer 09-08-2019 | 5:05 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் 1000 ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக மாகாணக் கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இந்த மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.
பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் தொடர்பிலான ஆவணங்கள் வௌியிடப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணத்திற்கமைய நேர்முகத் தேர்விற்கு அவர்கள் அடுத்த வாரத்தில் அழைக்கப்படவுள்ளதாகவும் மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.