கடற்பரப்பில் தார் உருண்டைகள் கண்டுபிடிப்பு

இரத்மலானையிலிருந்து நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் தார் உருண்டைகள் கண்டுபிடிப்பு

by Staff Writer 09-08-2019 | 3:58 PM
Colombo (News 1st) இரத்மலானையிலிருந்து நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான தார் உருண்டைகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து இவை வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தார் உருண்டைகளை கடற்கரைகளிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையாளர், பேராசிரியர் டர்னி பிரதீப்குமார தெரிவித்தார். நீர்கொழும்பு முதல் களுத்துறை வரையான கடற்கரையை அண்மித்த பல இடங்களில் தார் உருண்டைகள் குவிந்து காணப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.