கிராம வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

வட மாகாணத்தின் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

by Staff Writer 08-08-2019 | 7:33 AM
Colombo (News 1st) வட மாகாணத்திலுள்ள கிராம வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராம வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இதன்கீழ் யாழ். மாவட்டத்தில் 139.45 கிலோமீற்றர் நீளமான வீதியும் கிளிநொச்சியில் 60.31 கிலோமீற்றர் வீதியும் மன்னார் மாவட்டத்தில் 117.33 கிலோமீற்றர் வீதியும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இது தொடர்பில் பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.