வெற்றிலைக்கேணியில் பாட்டியை கொலை செய்த 16 வயது சிறுவன் கைது

by Staff Writer 07-08-2019 | 5:43 PM
Colombo (News 1st) வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் தனது பாட்டியை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 15 மற்றும் 16 வயதான சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தகராறில் முடிந்துள்ளது. தகராறை விலக்க அவர்களின் பாட்டி முயன்றுள்ளார். இதன்போது, 16 வயதான சிறுவன் தனது சகோதரனை நோக்கி கத்தியை எறிந்த போது, பாட்டி தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 72 வயதான வயோதிபப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.