வசந்த கரன்னாகொட மற்றும் ரொஷான் குணதிலக்கவிற்கு கௌரவத் தரமுயர்வு

by Staff Writer 07-08-2019 | 1:50 PM
Colombo (News 1st) அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோருக்குக் கௌரவத் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கடற்படைத் தளபதியாக செயற்பட்டு ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல் ஒப் த பீல்ட்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேவேளை, 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், விமானப்படைத் தளபதியாகக் கடமையாற்றிய ரொஷான் குணதிலக்க, மார்ஷல் ஒப் தி எயார் தரத்திற்கும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.