மெக்ஸிக்கோவில் தங்க நாணயங்கள் கொள்ளை

மெக்ஸிக்கோவில் ஒருதொகை தங்க நாணயங்கள் கொள்ளை

by Staff Writer 07-08-2019 | 2:43 PM
Colombo (News 1st) மெக்ஸிக்கோவில் நாணயங்களை அச்சிடும் நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து தங்க நாணயங்கள் திருடப்பட்டுள்ளன. ஆயுததாரிகள் இருவரால் 2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தங்க நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயினிலிருந்து மெக்ஸிக்கோ சுதந்திரமடைந்து 100 வருட பூர்த்தியை முன்னிட்டு அச்சிடப்பட்ட நாணயங்களை இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன், குறித்த தலைமையகத்தில் ஊழியர்களும் தொடர்புபட்டிருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.