பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம்

பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம்

by Staff Writer 07-08-2019 | 12:04 PM
Colombo (News 1st) பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர, பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் உள்ளிட்ட 8 பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரதமர் பாதிகாப்புப் பிராந்தியத்திற்கு பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் A.J. கரவிட்ட, பிரதமர் பாதுகாப்புப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் N.L.C. சம்பத் குமார, அரச புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.