நியூசிலாந்துடனான தொடரில் இலங்கையின் தலைமை பயிற்றுநராக ருமேஷ் ரத்நாயக்க நியமனம்

by Staff Writer 07-08-2019 | 8:48 PM
Colombo (News 1st) நியூஸிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ருமேஷ் ரத்நாயக்க இலங்கை அணியின் தலைமை பயிற்றுநராக செயற்படவுள்ளார். இதனை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிமுகப்படுத்தியுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் உள்ளடங்கும் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது. தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ள ருமேஷ் ரத்நாயக்க இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக செயற்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.