ஷாந்த பண்டார இராஜினாமா 

தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்து ஷாந்த பண்டார இராஜினாமா

by Staff Writer 07-08-2019 | 2:27 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய தாம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் மறைவின் பின்னர், அந்த மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்திற்காக தாம் நியமிக்கப்படவுள்ளமையால், தேசியப் பட்டியல் உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் ஷாந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.