சஹ்ரானுடன் ஆயுதப்பயிற்சி பெற்ற மூவர் கைது

சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மூவர் அம்பாறையில் கைது

by Staff Writer 07-08-2019 | 3:53 PM
Colombo (News 1st)  நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையில் சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மூவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லதே இப்ராஹிம் அமைப்பை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை, மாவனெல்ல மற்றும் வரக்காபொல பகுதிகளை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்கள் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்