உணவு தவிர்ப்பு போராட்டம் 900 நாட்களை எட்டியது

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களில் உணவு தவிர்ப்பு போராட்டம் 900 நாட்களை எட்டியது

by Staff Writer 07-08-2019 | 7:26 PM
Colombo (News 1st) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் சுழற்சி முறையில் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் 900 நாட்களை எட்டியது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.