உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் எதிர்ப்பு பேரணி: பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

by Staff Writer 07-08-2019 | 8:19 PM
Colombo (News 1st) உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணியின் மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான எதிர்ப்பு பேரணி லோட்டஸ் சுற்றுவட்டத்தை சென்றடைந்தது. அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்ல முயன்றனர். இதன்போது, அவர்களை கலைப்பதற்கு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். எதிர்ப்பு காரணமாக காலி முகத்திடலுக்கு பிரவேசிக்கும் லோட்டஸ் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.