நிந்தவூர் கடலில் மூழ்கி குழந்தை பலி

நிந்தவூர் கடலில் மூழ்கி குழந்தை பலி

by Staff Writer 06-08-2019 | 3:28 PM
Colombo (News 1st) அம்பாறை - நிந்தவூர் கடலில் மூழ்கி குழந்தை ஒன்றை உயிரிழந்துள்ளது. இன்று காலை 6.45 அளவில் தனது தாத்தாவுடன் கடற்கரையோரத்திற்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இலியாஸ் மொஹமட் ஆதில் எனும் ஒரு வருடம் 9 மாத குழந்தையே அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காற்றுடனான வானிலையால் குறித்த கடற்பிராந்தியம் கொந்தளிப்பாகக் காணப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர். சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.