டயகமயில் 12 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பு தீக்கிரை

by Staff Writer 06-08-2019 | 8:44 PM
Colombo (News 1st) டயகம - சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அங்குள்ள பாடசாலையில் தங்கியுள்ளனர். டயகம - சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்றிரவு பரவிய தீயினால் 12 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பு முற்றாக தீக்கிரையானது. தீயினால் வீடுகளை இழந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் சந்திரிகாமம் தமிழ் வித்தியாலத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மின் ஒழுக்கினால் தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.