ஏறாவூர் விபத்தில் பெண் உயிரிழப்பு

ஏறாவூர் விபத்தில் பெண் உயிரிழப்பு

by Staff Writer 06-08-2019 | 3:32 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் - வாழைச்சேனை பகுதியிலுள்ள பாதசாரி கடவையில் சென்ற பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த 66 வயதான பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அதில் பயணித்தவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டகளப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.