by Staff Writer 06-08-2019 | 3:50 PM
Colombo (News 1st) மாத்தளை மாவட்டத்தில் நன்னீர் மீன் வளர்ப்பினை மேம்படுத்தும் செயற்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு தம்புள்ளை, நாவுல, கலேவெல பகுதிகளில் சிறிய மற்றும் மத்திய அளவிலான குளங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
தம்புள்ளை நகருக்கு அருகாமையில் இப்பன்கட்டுவ பகுதியில் 200 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் மீன் வளர்ப்பு நிலையம் ஒன்றை அமைக்கவும் அதன் மூலம் மீன் குஞ்சுகளை விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.