English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
03 Aug, 2019 | 4:54 pm
நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் சில காரணங்களால் 7 ஆவது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நயன்தாராவின் முந்தைய படங்களைப் போல் கொலையுதிர் காலம் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால், இந்த படம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த ஜனவரியில் படத்தை திரைக்கு கொண்டுவரத் திட்டமிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியானதால் பெப்ரவரிக்கு தள்ளிவைத்தனர். அதன் பிறகு, படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால் வௌியீடு மே மாதத்திற்கு தள்ளிப்போனது.
பிறகு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர். அதன் பிறகு வழக்கு விசாரணைகள் முடிந்து ஜூலை 26 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவித்தனர். அப்போதும் படம் வௌிவரவில்லை. ஆகஸ்ட் 1 ஆம் திகதி வெளியாகும் 2 ஆம் திகதி வெளியாகும் என்றெல்லாம் அறிவித்தனர். ஆனால், நேற்றும் படம் திரைக்கு வரவில்லை. 7 ஆவது முறையாக வௌியீட்டுத் திகதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
09 Jun, 2022 | 04:15 PM
15 Jan, 2020 | 06:25 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]wsfirst.lk
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS