by Staff Writer 03-08-2019 | 3:28 PM
Colombo (News 1st) சுமார் 3 கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த 9 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 4 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பேங்கொக்கிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் சங்கிலி வடிவில் தங்கத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.