மீரிகமயில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 6 பேர் உயிரிழப்பு; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 03-08-2019 | 7:44 PM
Colombo (News 1st) மீரிகம - பாதுராகொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது. மேலும் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். கடந்த முதலாம் திகதி குறித்த இடத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய சிலர், ஒரே நேரத்தில் சுகயீனமடைந்தமையினால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஐவர் உயிரிழந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். மதுபானம் அருந்திய மற்றுமொருவரின் சடலம் வத்தேமுல்ல பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் இருந்து நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஏனைய ஐவரும் பொத்தேவெல, பாதுராகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். உயிரிழந்த சிலரின் மரண விசாரணை நேற்று (02) இடம்பெற்றது. சட்டவிரோத மதுபானத்தை விற்பனை செய்த நபர் மீரிகம பொலிஸாரினால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.