மக்கள் சக்தி: அபிவிருத்தியின் நிழல் கூட படராத பிரதேசங்களில் வாழும் மக்கள்

by Staff Writer 03-08-2019 | 9:23 PM
Colombo (News 1st) அபிவிருத்தி இந்நாட்களில் அநேகமானவர்களின் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆனால், அபிவிருத்தியின் நிழல் கூட படராத பிரதேசங்களில் வாழும் மக்கள், மக்கள் சக்தி குழுவினரிடம் தமது குறைகளை நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர். பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்கள் எதிர்பார்ப்பது துரித அபிவிருத்தியை அல்ல. சுத்தமான குடிநீரும் தமது விளைநிலங்களை பாதுகாப்பதற்கான யானை வேலியுமே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் ஒரு குழுவினர் அம்பாறையிலுள்ள பல பகுதிகளுக்கும் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். அபிவிருத்தியின் உச்சத்தில் இருப்பதாக சொல்லப்படும் கொழும்பில் வசிக்கும் மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக மற்றுமொரு குழுவினர் பயணித்தனர்.

ஏனைய செய்திகள்