ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எதிர்பார்ப்பு: பிரதமர்

by Staff Writer 03-08-2019 | 9:00 PM
Colombo (News 1st) எதிர்வரும் 10 வருடங்களில் ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எதிர்பார்ப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை, தெங்கு, இறப்பர் மாத்திரமல்லாது பழ வகைகள், மரக்கறிகளை ஏற்றுமதி செய்வதே நோக்கமெனவும் பிரதமர் கூறினார். தற்போது விவசாயம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதால் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பெல்வத்த பகுதியிலுள்ள விவசாய அமைச்சிற்கு சொந்தமான பெஷன்ஃப்ரூட் செய்கையை பிரதமர் இன்று பார்வையிட்டார். இதன்போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.