தாய்லாந்தில் 6 வெடிப்புச் சம்பவங்கள்: 4 பேர் காயம்

தாய்லாந்தில் 6 வெடிப்புச் சம்பவங்கள்: 4 பேர் காயம்

by Bella Dalima 02-08-2019 | 9:07 PM
தாய்லாந்தின் பேங்காக்கை அண்மித்து இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு அந்நாட்டு பிரதமர் Prayut Chan-o-cha பாதுகாப்புத்தரப்பிற்கு உத்தரவிட்டுள்ளார். பேங்காக் நகரில் வர்த்தகக் கட்டிடத் தொகுதியொன்றிற்கு அருகில் சிறு அளவிலான 6 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. இதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் பங்கேற்றுள்ள வௌிநாட்டு அமைச்சர்களின் மாநாடொன்று இடம்பெறும் பின்னணியில் இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.