சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது

சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது

by Staff Writer 02-08-2019 | 4:15 PM
Colombo (News 1st) மொஹமட் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பிபிலை பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரி மொஹமட் சஹ்ரானுடன் இவர்கள் இருவரும் ஹம்பாந்தோட்டையில் பயிற்சிகளைப் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.