வடக்கு ரயில் மார்க்க நேர அட்டவணையில் மாற்றம்

வடக்கு ரயில் மார்க்க நேர அட்டவணையில் மாற்றம்

by Staff Writer 01-08-2019 | 7:01 AM
Colombo (News 1st) வடக்கு ரயில் மார்க்கத்தின் நேர அட்டவணையில் இன்று (01) முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பயணிகளின் நலன்கருதி நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தலைமன்னாரிலிருந்து அநுராதபுரம், மதவாச்சி ஊடாக கொழும்பு கோட்டை வரை காலை மற்றும் இரவு வேளைகளில் பயணிக்கும் ரயில், இன்று முதல் கோட்டையிலிருந்து தலைமன்னார் - யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை பயணிக்கவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. தலைமன்னாரிலிருந்து அநுராதபுரம், மதவாச்சி ஊடாக கோட்டை வரை பயணிக்கும் ரயில்களில், அநுராதபுரத்திலிருந்து மதவாச்சி வரையான பகுதிகளில் பயணிகள் குறைவாக பயணிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன், கோட்டை முதல் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரை பயணிக்கும் ரயிலில் அதிக பயணிகள் பயணிக்கின்றமையும் ஆய்வில் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.