பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளத் தயார்: சஜித் பிரேமதாச அறிவிப்பு

by Bella Dalima 01-08-2019 | 7:51 PM
Colombo (News 1st) பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என செயற்குழுவிற்கு அறிவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று ஹம்பாந்தோட்டையில் தெரிவித்தார். இந்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களினதும் எதிர்கால பொறுப்பு, தற்போதைய பொறுப்பு மற்றும் பிறக்கவுள்ள குழந்தைகளின் பொறுப்பைக்கூட தாம் ஏற்றுக்கொள்வதாக சஜித் பிரேமதாச கூறினார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெல்லகஸ்வெவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நந்திமித்ர கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.