தெற்கு அதிவேக வீதிக் கட்டமைப்பு அபிவிருத்தி

தெற்கு அதிவேக வீதிக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

by Staff Writer 01-08-2019 | 9:51 AM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதிக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தெற்கு அதிவேக வீதியில் 3 இடம் மாறும் இடங்கள் மற்றும் இணையும் தேசிய 5 பெருந்தெருக்களை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 75 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அபிவிருத்திப் பணிகளின் பின்னர் எஞ்சும் 4,300 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி மேலதிக வீதி பகுதியைப் புனரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரங்களுக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.