ருஹுணு பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் மூடல் 

ருஹுணு பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டது

by Staff Writer 31-07-2019 | 5:31 PM
Colombo (News 1st) ருஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பகிடிவதை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ருஹூணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சமன் சந்தன குறிப்பிட்டார். இதேவேளை, மாணவர்கள் சிலர் விரிவுரையாளர்களின் வாகனங்கள் மீது நேற்று கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 7 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர்களின் வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ருஹூணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் சமன் சந்தன தெரிவித்தார்