இந்தியாவின் இளம் வீரர் ப்ரித்வி ஷாவுக்கு தடை

ப்ரித்வி ஷாவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தடை விதிப்பு

by Staff Writer 31-07-2019 | 1:58 PM
Colombo (News 1st) இந்திய அணியின் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ப்ரித்வி ஷாவுக்கு (Prithvi Shaw) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தடை விதித்துள்ளது. ப்ரித்வி ஷா, கடந்த பெப்ரவரி மாதம் இந்திய தேசியளவில் நடத்தப்பlட்ட சையத் முஷ்டாக் அலி சவால் கிண்ணத்தில் ஊக்கமருந்து பயன்படுத்தி விளையாடியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ப்ரித்வி ஷாவுக்குத் தடை விதித்துள்ளது. 19 வயதான ப்ரித்வி ஷா, அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இளம் இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.