கடத்தல்: பிரதான சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை

போதைவில்லைகளைக் கடத்திய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

by Staff Writer 31-07-2019 | 9:29 AM
Colombo (News 1st) மத்திய தபால் பரிமாற்றகத்தில் கைப்பற்றப்பட்ட போதைவில்லைகளைக் கடத்திய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணைக் குழு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 15 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று, மத்திய தபால் பரிமாற்றகத்தில் கைது செய்யப்பட்டார். இதன்போது எக்ஸ்டசி வகையைச் சேர்ந்த 3 050 போதைவில்லைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போர்த்துக்கல்லிருந்து குறித்த பொதி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிரதான சந்கேநபரின் உதவியாளர் என்பதுடன், போதைவில்லைகள் அடங்கிய பொதியைப் பெற்றுக் கொள்வதற்காக வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - 14 ஐ சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (31) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.