கிளிநொச்சி இரட்டைக்கொலை: சந்தேகநபர் கைது

by Staff Writer 31-07-2019 | 5:08 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - ஜயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிளிநொச்சி தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறினர். இரட்டைக்கொலை இடம்பெற்ற வீட்டின் அயலில் வசித்த 44 வயதான ஒருவரே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கும் உயிரிழந்த விஷ்ணுகாந்தி லிங்கேஸ்வரனுக்கும் இடையில், கொலை இடம்பெற்ற தினத்திற்கு முதல்நாள் மோதல் இடம்பெற்றுள்ளமை ஆரம்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி ஜயந்திநகர் பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாயும் மகனும் கடந்த 29 ஆம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டனர். 74 வயதான விஷ்ணுகாந்தி வள்ளியம்மை 34 வயதான விஷ்ணுகாந்தி லிங்கேஸ்வரன் ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.