இலங்கையில் சீனி தயாரிப்பை மேம்படுத்த நடவடிக்கை

இலங்கையில் சீனி தயாரிப்பை மேம்படுத்த நடவடிக்கை

by Staff Writer 31-07-2019 | 1:28 PM
Colombo (News 1st) இலங்கையில் சீனித் தயாரிப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு, கரும்பை உற்பத்தி செய்வதற்காக மொனராகலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அநுராதபுரம், திருகோணமலை அம்பாறை, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 4 ஆயிரம் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் தற்போதைய சீனிக்கான தேவை, வருடாந்தம் 6 இலட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் தொன்னாகும். இதில் 90 வீதமானவை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக வருடமொன்றிற்கு செலவிடப்படும் நிதி 350 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.