இங்கிலாந்து அழகிப் போட்டியில் இலங்கை பெண்

இங்கிலாந்து அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ள இலங்கை வம்சாவளி பெண்

by Staff Writer 31-07-2019 | 8:56 PM
Colombo (News 1st) இங்கிலாந்து அழகிப் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். Miss England 2019 அழகிப் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் இலங்கை வம்சாவழி பெண்ணான டிலானி செல்வநாதன் இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளார். Miss England போட்டியின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக டிலானி செல்வநாதன் கூறியுள்ளார். அவருக்கு பலவேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். இறுதிப்போட்டி தனக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.