அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

by Staff Writer 31-07-2019 | 8:20 PM
Colombo (News 1st) அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகள் கிடைத்ததுடன், எதிராக 2 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.