அவசரகால சட்டம் தொடர்பிலான விவாதம் இன்று

அவசரகால சட்டம் தொடர்பிலான விவாதம் இன்று

by Staff Writer 31-07-2019 | 7:22 AM
Colombo (News 1st) பாராளுன்றம் இன்று (31) முற்பகல் 10.30 மணிக்குக் கூடவுள்ளது. இன்றைய அமர்வில் அவசரகால சட்டம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது. இதேவேளை, நேற்று முன்தினம் அமைச்சுப் பதவிகளை ஏற்ற முஸ்லிம் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரணவுக்கும் பாராளுமன்றத்தில் ஆசனம் ஒன்றை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட உறுப்புரிமையை அடிப்படையாகக் கொண்டு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.