அரசியல்வாதிகள் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர்: மக்கள் சக்தி குழுவினரிடம் மக்கள் முறைப்பாடு

by Staff Writer 31-07-2019 | 8:45 PM
Colombo (News 1st) தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களின் துயரங்களைக் கேட்டறியும் அரசியல்வாதிகள் தொடர்ந்து தம்மை ஏமாற்றி வருவதாக மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினரிடம் மக்கள் தெரிவித்து வருகின்றனர். அட்டாளைச்சேனைக்கு சென்றிருந்த மக்கள் சக்தி குழுவினரிடம் கடற்றொழிலில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என அங்குள்ள மீனவர்கள் தெரிவித்தனர். கலாவெவ - கொலம்பேவ, இகல புளியங்குளம், மீவெல்லேவ உள்ளிட்ட கிராமங்களுக்கும் மக்கள் சக்தி குழுவினர் சென்றிருந்தனர். இதன்போது, குடிநீர் பிரச்சினை, காட்டு யானைகள் பிரச்சினை, முகாமைத்துவமற்ற நீர்ப்பாசன திட்டத்தால் நெற்செய்கை அழிவு போன்ற விடயங்களை மக்கள் முன்வைத்தனர். பேருவிட்டிய, பனங்கல, குருந்துகொல்ல ஆகிய கிராமங்களுக்கு சென்ற மக்கள் சக்தி குழுவினரிடமும் மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டியிருந்தனர்.