துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் பலி

Update: பாணந்துறையில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் உயிரிழப்பு

by Staff Writer 30-07-2019 | 9:23 AM
Colombo (News 1st) மத்தேகொட பகுதியில் வேனொன்றைக் கடத்திச் சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தப்பிச்சென்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுகம்பள - அஸ்கிரிவல்பொல பகுதியைச் சேர்ந்த 37 வயதான குறித்த சந்தேகநபர், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மத்தேகொடயில் வேனொன்றை கடத்திச் சென்ற சென்றவர்களில் ஒருவர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். சந்தேகநபர்கள், நேற்றிரவு 7.30 மணியளவில் கட்டுத்துப்பாக்கியைக் காண்பித்து வேனொன்றைக் கடத்திச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.