வெளிநாட்டுக் குப்பைகளை யாழ்ப்பாணத்தில் கொட்டுவதற்கு முயற்சி: பொது அமைப்புகள் சந்தேகம்

by Staff Writer 30-07-2019 | 8:34 PM
Colombo (News 1st) வௌிநாட்டுக் குப்பைகளை யாழ்ப்பாணத்தில் கொட்டுவதற்கு முயற்சி இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் தமக்கு எழுவதாக யாழ். பல்கலைக்கழக திட்டமிடல் பிரிவின் விரிவுரையாளர் செல்வராசா ரவீந்திரன் தெரிவித்தார். காங்கேசன்துறை சீமந்து தொழிற்சாலைக்குப் பின்னால் காணப்படும் பாரிய கிடங்கில் கழிவுகளைக் கொட்டுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தமக்கு அறியக்கிடைத்துள்ளதென செல்வராசா ரவீந்திரன் மேலும் கூறினார். யாழ். மாவட்டத்தின் பொது அமைப்புகள் இன்று யாழ். ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.