வறட்சியால் 6,18,000-இற்கும் அதிகமானோர் பாதிப்பு

வறட்சியால் 6,18,000-இற்கும் அதிகமானோர் பாதிப்பு

by Staff Writer 30-07-2019 | 10:41 PM
Colombo (News 1st) நிலவும் வறட்சியான வானிலையால் 6,18,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 1,94,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 40,000 பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னச்சாலம்பன் கிராம மக்களும் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வட மேல் மாகாணத்தில் 57,000-இற்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தளம் மாவட்டமே அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. மாவட்டத்தில் 34,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 7 மாத காலமாக நிலவும் கடும் வறட்சியினால் முந்தல் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முன்னெடுக்கப்பட்ட வேளாண்மை அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர். இதேவேளை, கால்நடைகளும் மேய்ச்சல் தரை, நீரின்றி சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன.