ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

by Staff Writer 30-07-2019 | 1:43 PM
Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களான L.T.B. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க வேண்டுமென்றே நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உரையாற்றவில்லை என அவர் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.