சஹ்ரானது மனைவியின் சகோதரன் கைது

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் கைது

by Staff Writer 30-07-2019 | 12:20 PM
Colombo (News 1st) பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் குருணாகல் - கட்டுபொத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான மொஹமது அப்துல் காதர் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹ்ரானுடன் நுவரெலியாவில் நடத்தப்பட்ட ஆயுதப் பயிற்சி மற்றும் சொற்பொழிவுகளில் சந்தேகநபர் பங்கேற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மொஹமட் சஹ்ரானுடைய மனைவியின் சகோதரனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் தாயின் சகோதரி, நவுபர் மௌலவியைத் திருமணம் செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.