சைட்டம் பட்டதாரிகள் 82 பேரை பதிவுசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 30-07-2019 | 11:45 AM
Colombo (News 1st) சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 82 பேருக்கு மருத்துவ பயிற்சிகளை உரிய வகையில் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி, அவர்களைப் பதிவுசெய்யுமாறு உயர்நீதிமன்றம், இலங்கை மருத்துவ சபைக்கு இன்று (30) உத்தரவிட்டுள்ளது. மாலம்பே சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற 3 பட்டதாரிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு மீதான இறுதிப் பரிசீலனையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனெக அலுவிஹாரே, L.T.B. தெஹிதெனிய மற்றும் பீ. பத்மன் சூரசேன ஆகியோர் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளனர். அதற்கமைய, இன்று முதல் 3 வாரங்களுக்குள் சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்களைப் பதிவுசெய்யுமாறு உயர்நீதிமன்றம், இலங்கை மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட்டுள்ளது.